நியூயார்க்:
பயணிகள் மீது ரயில் மோதியதை கண்ட மக்கள் அச்சத்தில்தான் உறைந்து போய் விட்டனர். இந்த கோர விபத்தில் 3 பேர் பலியாக... 100 பேர் காயமடைந்தது சோகத்திலும் சோகம்.


அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில்தான் இப்படி ஒரு கோர விபத்து நடந்துள்ளது. இங்கு வந்த ரயில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக ரயில் நிலையம் மீது மோதியது. இதனால் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் வரவேற்பு அறைக்குள் புகுந்தது. 


இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: