செங்குன்றம்:
தேங்க்யூ... மழையே... தேங்க்யூ மழையே என்று சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதற்கு தெரியுங்களா?


மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. இதற்காகத்தான். மழைக்கு நன்றி சொல்லியிருக்காங்க... 


வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 


இந்த தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. இதனால் 2 மாதத்திற்கு சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: