புதுடில்லி:
இசைக்கிறார்... இசைக்கிறார்... ஐ.நா. சபையில் இசைக்கிறார் இசைப்புயல் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.


மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி 100 பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளதாம். 

எம்.எஸ். சுப்புலட்சுமி


அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஐ.நா. சபையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதை சரிசெய்ய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.


இந்த ஐநா பொது சபையில் வரும் ஆக.15-ம் தேதி கர்நாடக சங்கீத ஜாம்பவனாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதில்தான் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைக்குழுவுடன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
கலக்குங்க இசைப்புயலே...



మరింత సమాచారం తెలుసుకోండి: