முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், முடி நன்கு வளரவும் சில குறிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.


இரவில், தினமும் படுக்கும் முன்பு, தலை முடியில் எண்ணெய் தேய்த்தால் முடி உதிராது.


தினமும் படுக்கும் முன்பு, கூந்தலை சீவ வேண்டும். மெதுவாக சிக்கில்லாமல் சீவி, கூந்தலை மடித்து கட்டினால் முடி உதிராது. 


கூந்தலை வறட்சியாக வைத்து கொள்ளாமல், அடிக்கடி எண்ணெய் தேய்த்து வந்தால் முடி கருமையாக இருக்கும். 


பொடுகு இருப்பவர்கள், தேங்காய் எண்ணெய் உபோயோகப்படுத்துவதற்கு பதில் நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து வரலாம். 


நீண்ட கூந்தல் உடையவர்கள், இரவில் படுக்கும் முன்பு, கூந்தலை மடக்கி கட்டி கொண்டு படுக்கலாம், அவ்வாறு செய்வதனால், தும்பிலுள்ள முடிகள் வெடிக்காது, சிக்கும் அடையாது.  


మరింత సమాచారం తెలుసుకోండి: