சென்னை:
பிரபல செல்போன் நிறுவனமான ஏர்டெல் கபாலி படம் வெளி வருவதை ஒட்டி புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.


கபாலி படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்களும் கபாலி பட புரமோஷனில் பங்கு கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கபாலியுடன் ஏர்டெல் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. 


இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘கபாலி’ படத்திற்காக பிரத்யேமாக புதுப்புது திட்டங்களை அறிவிக்கவுள்ளது. ‘கபாலி’ சிம் கார்டு, ‘கபாலி’ ரீசார்ஜ் பேக் ஆகியவை இவற்றில் அடங்கும்.


இந்த புதிய திட்டங்களை பெறும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரஜினிக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ். செய்யும் வாய்ப்பும் உண்டாம். ரசிகர்களிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.-களை ஒரு தொகுப்பாக எடுத்து புத்தக வடிவில் அச்சடித்து, ரஜினிக்கு நினைவு பரிசாகவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: