நியூயார்க்:
கூகுள் மற்றும் இந்திய அரசு நிறுவனமான ரெயில்டெல் வாயிலாக 23 ரயில் நிலையங்களில் 20 லட்சம் பேர் இலவச வை-பை வசதியை பயன்படுத்துகின்றனர் என்று கூகுள் நிறுவனம் பெருமிதமாக தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பேசுகையில், “இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ரெயில்டெல் உடன் இணைந்து கூகுள் வழங்கி வருகிறது.


இந்தியாவில் 23 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வை-பை சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மக்கள் இலவச வை-பை வசதியை பயன்படுத்தி வருவகின்றனர் என்றார். 


கூகுளின் இலவச வை-பை திட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: