புதுடில்லி:
உயருது... உயருது... கார்களின் விலை உயருது. எந்த கார்கள் தெரியுங்களா?


விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹீண்டாய் கார் நிறுவனம்தான் தங்கள் நிறுவன கார்களின் விலையை உயர்த்த உள்ளதாம். இது வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 


 உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பது மற்றும் முதலீடு செலவுகள் அதிகமாவதை கணக்கில் கொண்டு கார்களின் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளதாம் ஹீண்டாய் நிறுவனம்.


 இதனால் கார்களின் மாடலுக்கு தகுந்தபடி ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்படும் என்று ஹீண்டாய் நிறுவன துணைத் தலைவர் ராகேஷ் பநீவஸ்தவா தெரிவித்துள்ளார்


మరింత సమాచారం తెలుసుకోండి: