புதுடில்லி:
பெட்ரோல், டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி இறக்கி வருகின்றன. இதில் விலை உயர்வுதான் அதிகமாக இருக்கு. விலை குறைவு என்னவோ... கண்துடைப்பாகத்தான் இருக்கிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: