சென்னை:
ஓடுற படத்துல இருக்கலாம்... ஆனா இன்டஸ்ட்ரியை விட்டு ஓடுற அளவுவுக்கு இருக்கிற படமா? அடி ஆத்தி என்னை ஆளை விடுங்கப்பான்னு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துள்ளார் த்ரிஷா. விஷயம் இதுதான்.


சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த படத்திலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். இந்த செய்திதான் தற்போது பெரிய மழையாக இடி இடித்துக் கொண்டிருக்கிறது. காரணம் என்ன தெரியுங்களா?


‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ பட இயக்குனர்தான் சிம்புவையும்- த்ரிஷாவையும் வைத்து படம் பண்ண துடித்தவர். அட நம்ப பேரை வைத்து படம் செஞ்சவராச்சேன்னு ஒரு நம்பிக்கையில அட்வான்ஸை வாங்கி கல்லா பெட்டியில போட்டுட்டு கதையை கேட்டு இருக்கிறார் த்ரிஷா. கதையை கேட்டதிலிருந்தே அவரால தூங்க முடியலையாம்... விழிக்க முடியலையாம்... அம்புட்டு கதி கலங்கிப் போய்விட்டாராம்.

அவ்வளவு சூப்பரா இருந்துச்சான்னு கேட்டா... தலையிலேயே குட்டு விழும் நமக்கு. 
பல மீனிங்கையெல்லாம் தாண்டுகிற அளவுக்கு இருக்கிறதாம் கதை. “ஓடுற படத்துல இருக்கறது நல்லதுதான். ஆனால், இன்டஸ்ட்ரியை விட்டே ஓட்டுற படத்துல இருக்கணுமா? நோ..நோ.. என்று மேளதாளம் அடிக்காமல் நல்ல நேரம் பார்க்காமல் வாங்கி அட்வான்ஸை திருப்பி கொடுத்து பெரிய கும்பிடா போட்டு விட்டு விலகி விட்டாராம் த்ரிஷா.


அட ஆற்று மீன் சிக்கலைன்னா.. என்ன என்று வலையோட கடலுக்கு கிளம்பிட்டாராம் ஆதிக் ரவிச்சந்திரன். கடல் மீன் சிக்குதோ, இல்லை வலை கிழியுதோ? பொறுத்திருந்து பார்ப்போம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: