சமீப காலமாகவே ஜீவமான நடிகர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் பிளாப்பாகி வரும் நிலையில், அவர் நடித்த 'திருநாள்' திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.


இந்த படம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் நேற்று, வெளிவந்த முதல் நாளிலே இந்த படத்தை யாரும் அதிகமாக பார்க்கவில்லையாம். இதனால் இந்த நடிகர் இப்போ மனசு ஒடஞ்சு போய் இருக்கிறாராம்.


சக நடிகர்கள் எல்லாம் ஹிட் படங்கள் கொடுத்து, தங்களின் சம்பளத்தை உயர்த்தும் போது, தான் நடிக்கும் படங்கள் மட்டும் ஏன் பிளாப்பாகிறது என வருத்தப்படுகிறாராம்.


மேலும் இனிமேல் நல்ல கதைகளை தேர்வு செய்த பின் தான், நடிக்க வேண்டும் என்று இவர் முடிவு எடுத்துள்ளாராம். 


இவருடைய அடுத்த திரைப்படம் 'கவலை வேண்டாம்' வெற்றி பெறுமா அல்லது பிளாப்பாகுமா என்பதை நாம்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: