சமீபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகமத் யாசின் என்ற ஆறு வயது சிறுவன் தான் தனது பள்ளியின் அருகே கண்டெடுத்த ரூபாய் ஐம்பதாயிரம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்தான். அவனது நேர்மையை வியந்த காவல் துறை அதிகாரிகள் அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது அவனுக்கு தனது ஆதர்ச நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறினான்.



இன்று அவனை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முஹம்மது யாசினை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் யாசின் தனது சொந்த மகன் போன்றவன் என்றார்.



மேலும் யாசினின் படிப்பிற்கு தேவையான அத்தனை செலவுகளையும் தானே ஏற்று கொள்வதாகவும் அறிவித்து தன்னை காண வந்த அந்த சிறு வயது ரசிகனை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்தார் சூப்பர்ஸ்டார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: