சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வச்சது ஏன் ?

 

ஜீத்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல, எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் பிக்ஸ் ஆகிருந்தாங்க, இந்த காம்பினேஷன் எனக்கு பிடிச்சிருந்தது அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்கள தான் நான் செலக்ட் பண்ணினேன்.

 

 

இந்தக்கதை எப்படி எழுதினீங்க ?

 

ஜீத்து ஜோசப் : இந்தக்கதை என்னோடதல்ல, பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதியிருக்காங்க அவங்க கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம் அதனால தமிழ்ல சரியா இருக்கனும்கிறதுக்காக விக்ரம் வேதா ரைட்டர் மணிகண்டன் இதில வேலை பார்த்திருக்கார். இந்தபடத்தின் திரைக்கதையில 4,5 பேர் வேலை பார்த்திருக்கோம்.

 

கதை பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன் ?

 

ஜீத்து ஜோசப்: இது ஒரு ஃபேமிலி படம், திரில்லர் இருக்கு. ரெண்டு ஃபேமிலி அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில் ஒரு

திரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது.

 

 

தம்பி கார்த்தி, அக்காவுக்காக யாரை கொலை பண்றார் அத எப்படி மறைக்கிறார் ?

 

கார்த்தி : ப்பா நீங்களே கதை எழுதிடலாம் போலயே ! தம்பி இரண்டாம் பாகம் எடுத்துடலாம்.

 

 

இதுல வேற வேற லுக்ல வர்றீங்களே எத்தனை கேரக்டர் உங்களுக்கு ?

 

கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டு லுக் தான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டு லுக். ஒரே கேரக்டர் தான். நான் நிறைய கெட்டப் முயற்சி பண்ணினதில்லை. சார் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார் உங்கள சும்மாவே பாக்குறாங்க வேற லுக்லயும் பாப்பாங்கனு கன்வின்ஸ் பண்ணாரு. நான் ஒரு லுக்ல சுத்திட்டு இருக்கேன் இல்லையா அந்த லுக்ல கோவால   நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. சார் பைக்ல கூட்டிப்போய் பாருங்க எவ்வளவு பேர் உங்கள மாதிரி சுத்திட்டு இருக்காங்கனு காட்டினார். கோவா பகுதிக்கு மட்டும் அதை முயற்சி பண்ணிருக்கோம் அப்புறம் நார்மலா ஆயிடுவேன்.

 

 

ரெண்டு விதமான பாத்திரம் பண்ணிருக்கீங்க அதில் உள்ள மாற்றங்கள் என்னென்ன ?

 

கார்த்தி : ரெண்டு கேரக்டர் கிடையாது. ஒரு கேரக்டர் தான் டபுள் ஆக்‌ஷன் கிடையாது ஒரே கேரக்டர் எப்படி டிராவல் ஆகுது அது மட்டும்தான். அது எப்படி மாறுது என்கிறது தான்

 

 

ஜீத்து ஜோசப் : இருக்கு, நிறைய வேறுபாடு இருக்கு.  ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார். நீங்க பாருங்களேன் தெரியும்.

 

 

உங்க தம்பி தயாரிக்கிற படம் இந்த தம்பி கூட நடிக்கிறீங்க எப்படி இருந்தது ?

 

ஜோதிகா: எதிர் பார்க்கவே இல்ல, எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யாமா இருக்கு. அதுவும் தம்பின்னு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 

 

கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ?  இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?

 

ஜோதிகா : சூர்யா கூட தான். அவர் கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்.

 

எப்படியான சண்டை ?

 

ஜோதிகா: உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை.

 

கார்த்தி : அண்ணாகிட்ட நேத்து சொன்னேன் நீ பாட்டுக்கு ஆடியோ லாஞ்ச்ல எனக்கு கிளிசரின் போடாம அழுக வராது, இவங்க ஈஸியா பண்ணுவாங்கனு பேசிட்டு போயிட்ட, எங்க ரெண்டு பேரையும் அழுமூஞ்சினு சொல்லப்போறங்கன்னு சொன்னேன்.

 

அது திறமைதான். கிளிசரின் போடாம அழுறது ஈஸியான விசயம் கிடையாது இல்லையா ?

 

கார்த்தி : என்னைப் பொறுத்த வரைக்கும் கதை தான் எல்லாத்துக்கும் காரணம் இது எல்லாமே கதை தீர்மாணிக்கிற விசயம்னு நம்புறேன். எல்லாப் படதுலயும் வரும்னு சொல்ல முடியாது. கதை சரியா இருக்கனும் எமோஷன் இருக்கனும் அப்பதான் ஒர்க் அவுட் ஆகும்.

 

 

தமிழ் சினிமால நிறைய அக்கா தம்பி வந்துருக்காங்க இதிலென்ன ஸ்பெஷல் ?

 

ஜீத்து ஜோசப்: அத நீங்க தியேட்டர்ல தான் பார்க்கனும். இதுல எல்லா கேரகடருக்கும் ஒரு அடையாளம் இருக்கும் . ஒரு நோக்கம் இருக்கும் .

 

 

கார்த்தி : இல்ல கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆனா அத நீங்க தியேட்டர்லதான் பார்க்கனும்

 

 

ஜோதிக : இதுல நிறைய ஒரிஜினாலிடி இருக்கும்.

 

 

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது எது கஷ்டமா இருந்தது ?

 

கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன்.

 

வீட்லயும் அப்படித்தானா ?

 

கார்த்தி : ம்ம் வீட்லயும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்

 

ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்.

 

 

தமிழ் சினிமால ஜோதிகாவ பொம்பள கமல்னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்கீங்க ?

 

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும்  கிடையாது அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்த வரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டுந்தான்.

 

ஜீத்து ஜோசப் : ஒன்ணு சொல்லனும்  இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு ஸீனுக்கு முன்னாடி அவங்க தன்ன தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா ஃபுரபஷனல்.

 

ஜோதிகா : நன்றி சார்

 

 

தம்பினு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில் ?

 

ஜீத்து ஜோசப் : நிறைய டைட்டில் தேர்ந்தெடுத்தோம் ஆனா இந்தக்கதைக்கு இது தான் சரியா இருந்தது. இந்தப்படமே அக்கா தம்பி கதை தான் அதுனால இது சரினு தோணுச்சு .

 

கார்த்தி : நிறைய டைட்டில் யோசிச்சோம் கிடைக்கல, ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டாங்க, கெஞ்சி கூடப்பார்த்தோம் ஆனா கிடைக்கல அப்புறம் இந்த டைட்டில் சரியா இருக்கும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் எனக்குள்ள இருக்கிற ஒரு உதவி இயக்குநரா யோசிச்சு, நம்ம மொழில இருக்குற டைட்டில் படத்துக்கும் சரியான டைட்டில்னு இத வச்சுட்டோம

మరింత సమాచారం తెలుసుకోండి: