இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு  நடிக்கும் ஒரு புது திரைப்படத்தை இயக்குகிறார். இதில் ராகுல் ப்ரீத் சிங்க் கதாநாயகியாகவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.


இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாதில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.


இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை, சென்னையில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


இந்த படப்பிடிப்பு மொத்தம் 40 நாட்கள் நடைபெறுமாம். மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: