கர்நாடகா:
வாயை திறந்து வம்பை விலை கொடுத்து வாங்குவதில் முதலிடத்தில் இருக்கிறார் இவர்.


யார் தெரியுங்களா... குத்து படத்தில் அறிமுகமான ரம்யாதான். தமிழில் சில படங்களில் திறமை காட்டியவர் அப்புறம் இங்கிருந்து எஸ்கேப் ஆகி அரசியலில் தன் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார். 


சமீபத்தில் தான் இவர் பாகிஸ்தான் பற்றி கொடுத்த வாய்ஸ்... தேசதுரோக வழக்கை சம்பாதித்து கொடுக்க... அப்போது கூட அமைதியாகாமல் இப்போது கிரிமினல் வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளார்.


கர்நாடக நீதிமன்றமே இவர் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்க... இந்த வழக்கு எதற்காக தெரியுங்களா? சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள் என்று இவர் கொடுத்த வாய்ஸ்தான் இப்போது வழக்காக மாறி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: