சென்னை:
சோலோ ஹீரோவாக கலக்கியவரை காலம் இப்படி சீரியலுக்கு தள்ளிடுச்சே சாமியோவ் என்று கோலிவுட் அலப்பறை ஆறுமுகம் சொல்றாருங்க. அவர் சொல்ற கதாநாயகன் யார் தெரியுங்களா?


அவர் சரத்குமார்தான். நடிகர் சங்க தோல்விக்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்தார். சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி எதிலும் கலந்து கொள்ளவே இல்லை. பேரமைதியாக இருந்தார். 


இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒரு சீரியலை தயாரிக்கவுள்ளாராம். சோலோ ஹீரோவாக பல வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது சீரியலுக்கு வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: