சென்னை:
உண்மையா... இல்லை கிளப்பி விட்டுள்ளார்களா என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் பரிதவித்து வருகின்றனர்.


என்ன விஷயம் என்றால்... தெறி, தெறி என ரசிகர்களை கொண்டாட வைத்த விஜய், பைரவா படத்திற்கு பிறகு அட்லீயுடன் அடுத்த படத்திற்கான கூட்டணியை அமைத்துள்ளார். இந்த படம் தெறியை விட அதிகமாக தெறிக்க விடவேண்டும் என்று சொல்லிட்டாராம். இதனால் கதையில் இப்போ... செதுக்... செதுக் என்று செதுக்க ஆரம்பித்து விட்டார் அட்லீ என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்றாங்க... அப்படியே... இப்ப இன்னொரு வதந்தி உலா வருதாம்.


என்ன தெரியுங்களா? படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்று வதந்தியை கிளப்பி விட்டு இருக்காங்க... உண்மையா என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்காங்க... இதை படக்குழுவினர்தான் சொல்லணும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: