நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டும் இன்றி, திரைப்படங்களை தயாரிக்கவும், இயக்கவும் செய்து வருகிறார். 


இந்நிலையில் தனுஷை, தங்கள் மகன் என்று ஒரு தம்பதியினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். 


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊரில் வசிக்கும் கதிரேசன் - மீனாள் தம்பதியினர், தனுஷ் தங்களுக்கு பிறந்த மகன் என்று கூறி வருகின்றனர். 


கதிரேசன் சிவகெங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.


இந்த தம்பதியினர்களுக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பிளஸ் 1 படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து, சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி உள்ளதாகவும், நடிகரான பின்னர் இதுவரை தங்களை அவர் பார்க்க வரவில்லை என்றும் கூறுகின்றனர்.


மேலும் அவர்கள் சென்னைக்கு சென்று தனுஷை பார்க்க முயன்ற போது, கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் அவர்களை தடுத்துவிட்டதாகவும், இதுகுறித்து அவர்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: