கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக திரையுலகினுள் நுழைந்த அழகி ராஷ்மிகா மந்தனா. நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல், அப்படத்தின் கதாநாயகனான ரக்ஷித் ஷெட்டியோடு காதலும் மலர்ந்தது. அப்படத்தை தொடர்ந்து கன்னடத்தில் அஞ்சானிபுத்ரா, சமக் போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். 


Image result for sandalwood beauty apherald


முதலில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நா பேரு சூர்யா படத்தில் இவர் தான் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் கால்ஷீட் குளறுபடிகளால் அப்படத்தை விட்டு விலகினார் ராஷ்மிகா மந்தனா. இதன் பின்னர், இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான முதல் படமான சலோ சிறப்பாக ஓடவே, இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்ததாக நாணி மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ராஷ்மிகா மந்தனா, பிசியாக நடித்து வருகிறார். 


Image result for sandalwood beauty apherald


இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் மற்றும் ராமச்சரன் இணைந்து நடிக்க எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் பிரம்மாண்டமான படத்தில், நாயகியாக இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கமாக ராஜமவுலி படத்தில் நாயகிக்கு கிளாமர் தூக்கலாக இருக்கும் என்பதால், ராஷ்மிகா மந்தனா இன்னும் இப்படத்திற்கு ஓகே சொல்லாமல் காத்து கொண்டிருக்கிறாராம். காரணம் வேறொன்றும் இல்லை, படு கவர்ச்சியாக நடித்தால் காதலர் ரக்ஷித் என்ன நினைப்பாரோ, கல்யாணத்தில் ஏதேனும் குளறுபடி வந்து விடுமோ, என்ற பயம் தான் என்று பேசப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: