நடிகை ஜோதிகா, சந்திரமுகி, மொழி ,பச்சைக்கிளி முத்துச்சரம் என வரிசையாக நல்ல நல்ல வேடங்களில் நடித்து ஏறுமுகத்தில் தனது கேரியர் இருந்த போதே, திடீரென தன் காதலர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார். ஆனால் எட்டு வருடங்கள் கழித்து முப்பத்தி ஆறு வயதினிலே படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.



 இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்களிலும் நடித்தார் ஜோதிகா. இந்நிலையில் இன்று இவரது அடுத்த படமான காற்றின் மொழி ஷூட்டிங் தொடங்கியது. மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் வெளி வர இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடிக்கிறார். 



நடுத்தர குடும்ப பெண்ணான அவருக்கு ரேடியோ ஸ்டேஷனில் வேலை கிடைப்பதை அடுத்து நடக்கும் சுவாரசியங்கள் தான் கதை. ஹிந்தியில் வெளியாகி, வித்யா பாலன் நடித்து ஹிட்டடித்த துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் இனைந்து, விதார்த் மற்றும் லட்சுமி மன்சு ஆகியோர் நடிக்க உள்ளனர். காற்றின் மொழி தொடர் படப்பிடிப்பு நடத்தி, அக்டோபர் வெளியீடாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: