நடிகை சமந்தா தனது திருமணத்துக்கு பின்பு கூட பிசியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் நடித்த மூன்று படங்களுமே சூப்பர்ஹிட். கிராமத்து பெண்ணாக நடித்த ரங்கஸ்தலம், மனநல மருத்துவராக நடித்த இரும்புத்திரை, மற்றும் பத்திரிகையாளராக நடித்த மஹாநடி ஆகிய மூன்று படங்களிலுமே அவருக்கு வெவ்வேறு வேடங்கள் ஒவ்வொன்றிலும் சமந்தா சிறப்பாக நடித்து நல்ல பெயர் பெற்றார். 

Image result for samantha apherald

இதனை தொடர்ந்து சமந்தா இப்பொழுது யூடர்ன் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கன்னட படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய பவன் குமார் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்குகிறார். இந்த படத்தில் சமந்தா ஒரு துணிச்சலான பத்திரிகையாளராக நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சமந்தாவுக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு அமைந்துள்ளது.

Image result for samantha apherald

இந்த படத்தை கிறிஸய்யா என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தா தான் பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார். ஹீரோ என்று எவரும் கிடையாது. கிறிஸய்யா இதற்கு முன்னர் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இந்த படம் சீரியஸான ஒரு படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் ஆகஸ்டு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: