நடிகர் சூர்யா தற்பொழுது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவரது முப்பத்தி ஆறாவது படமாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும் முப்பத்தி ஏழாவது படமாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் என்.ஜி.கே படம் தான் முதலில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக ப்ரேமம் மலர் டீச்சர் சாய் பல்லவியும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்து வருகின்றனர்.



என்.ஜி.கே முழுக்க முழுக்க ஒரு அதிரடியான அரசியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் சூர்யா ஆய்த எழுத்து படத்தை அடுத்து பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் தான் ஒரு முழு நேர அரசியல்வாதியாக நடித்துள்ளார்.



ஏற்கனவே வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் என்.ஜி.கே படத்தின் அடுத்த லுக் ஜுலை ஆம் தேதி வெளியாக உள்ளது என்று இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக இந்த செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பது சூர்யா ரசிகர்களை குதூகலம் ஆக்கியுள்ளது. என்.ஜி.கே படம் தீபாவளி சிறப்பு படமாக வெளியாக உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: