விஷாலை வைத்து இந்த ஆண்டு இரும்புத்திரை என்ற பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் மித்ரன். இவருக்கு இரும்புத்திரையே முதல் படம் ஆகும். இந்த படத்தில் விஷால் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க இவரை எதிர்க்கும் வில்லனாக பவர்புல்லான ஒரு சைபர் க்ரிமினலாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார்.



மேலும் சமந்தா மற்றும் டெல்லி கணேஷும் நடித்திருந்த இந்த படம் ஆதார் கார்டு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் கருப்பு பக்கங்களை படம் பிடித்து காட்டி வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இந்த இயக்குனர் கார்த்தி அல்லது உதயநிதி ஸ்தாலினுடன் இணைவார் என்று வதந்திகள் பரவி வந்தன.



இந்நிலையில் மித்ரனின் அடுத்த படம் சிவ கார்திகேயனுடன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜா தயாரிக்க ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஒரு ஆக்ஷன் த்ரில்லரான இந்த படம் அடுத்த ஆண்டு ஷூட்டிங் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சமீபத்திய படமான சீமராஜா வசூல் மழையில் நனைந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: