நடிகர் சூர்யா  கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கிய பசங்க டூ மற்றும் தனது மனைவி ஜோதிகா நடித்த படங்களான முப்பத்தி ஆறு வயதினிலே மற்றும் மகளிர் மட்டும் என ஆறு படங்களை இது வரை தயாரித்துள்ளார்.



இந்நிலையில் இவரது 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பாக சூர்யா தேர்ந்தெடுத்திருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்து நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்ற அரசியல் த்ரில்லரான உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை. உறியடி முதல் பாகத்தை இயக்கி நடித்து தயாரித்த விஜய் குமார் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த விஷமா அறிமுக நாயகியாக நடிக்க உள்ளார்.



இந்த படம் நாளை முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்த படமும் ஒரு சமூக பிரச்னையை மையமாக கொண்ட ஒரு அரசியல் படமாகவே இருக்கும் என்று விஜய் குமார் கூறியுள்ளார். பார்க்கலாம் சூரிய தயாரிப்பில் உறியடி டூ படம் கமர்ஷியல் வெற்றியாக அமையுமா என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: