நடிகர் துல்கர் சல்மான் மம்முட்டியின் மகன் ஆவார். தமிழில் ஏற்கனவே வாயை மூடி பேசவும் படத்தில் அறிமுகம் ஆனார், மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தின் மூலமாக சூப்பர்ஹிட் ஒன்றை கொடுத்தார். கடைசியாக நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசனாக கலக்கியவர் தமிழில் தற்பொழுது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரிது வர்மாவுடன் நடித்து வரும் துல்கர் அடுத்த தமிழ் படத்தையும் தொடங்கி விட்டார்.



அடுத்ததாக துல்கர் சல்மான் அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக்கின் இயக்கத்தில் வான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஒரு டிராவல் படமான இந்த படத்தில் முதலில் நிவேதா பெத்துராஜ் நடிப்பதாக இருந்தது.



ஆனால் இன்று இந்த படம் துவங்கப்பட்ட போது இதில் அவர் நடிக்கவில்லை என்றும் மாறாக இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி அறிமுகம் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் க்ரிதி கார்பந்தா இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: