நடிகர் அருள்நிதி எப்பொழுதுமே தனது வித்யாசமான கதை தேர்வுக்காக அறியப்படுபவர். அவர் அறிமுகமான வம்சம் படமே ஒரு திருவிழா மையப்படுத்திய மாறுபட்ட கதைக்களம் கொண்டது. மேலும் டிமாண்டி காலனி, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என வித்யாசமான படங்களில் நடித்தார்.



சமீப காலமாக த்ரில்லர் படங்களான டிமான்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வரும் அருள்நிதி மீண்டும் ஒரு த்ரில்லரில் நடிக்க உள்ளார். 



கே-13  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்க, இவருக்கு ஜோடியாக யாஞ்சி புகழ் விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: