எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில் உருவாகியுள்ள எலி படமான மான்ஸ்டர் திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்ததாக அவர் தன்னை வைத்து கள்வனின் காதலி படத்தை எடுத்த தமிழ் வண்ணன் இயக்கத்தில்  அமிதாப்பச்சனுடன் நடித்து வரும் உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் சிறப்பான முறையில் வேகமாக நடைபெற்று வருகிறது.


இப்பொழுது புதிய தகவல் என்ன என்றால் கபாலி, காலா புகழ்  இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுவது தான் .


ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் பிரதான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க போவதாகவும் இந்த புதிய  படத்தை ரஞ்சித்தின் உதவியாளர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ரஞ்சித் சமீபத்தில் தான் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: