லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கி கொலையுதிர் காலம்  படம்  வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொலையுதிர் காலம்  மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய மர்ம நாவல், இந்நாவலை படமாக்க சுஜாதாவின் மனைவியிடம் விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் உரிமை பெற்றுள்ளார்.

Image result for கொலையுதிர் காலம் வெளியிட தடை!

இந்நிலையில் தான் உரிமை பெற்ற டைட்டிலான கொலையுதிர் காலம் டைட்டிலில் படம் வெளியிடுவது காப்புரிமை  மீறிய செயல், எனவே  படத்தை வெளியிட தடை விதிக்குமாறு  பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


மனுவை விசாரித்த நீதிமன்றம், கொலையுதிர்காலம் படத்தை வெளியிட  தடை விதித்து  ஜூன் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: