ஆந்திராவில் எல்லோரும் என்டிஆர் போல அரசியலில் கலக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நம்ம ரோஜாவுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்காதா என்ன. ஆனால் அவர் எம்ஜிஆர் ரேஞ்சுக்கு மக்களின் மனதில் அழுத்தமாக படிந்து வருகிறார். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி என்ற உறுதியோடு சாதனை சிகரத்தை எட்டியிருக்கிறார் ரோஜா. திரைத் துறைக்குள் நுழைந்த பத்தே ஆண்டுகளில் 100 படங்களுக்குமேல் நடித்து சாதனைப் படைத்த புயல் பெண்மணி.
Image result for ஆந்திரத்து எம்ஜிஆர்

பெரிய திரையில் ரசிகர்களின் இதயத்துக்குள் சிம்மானசனமிட்டவர், தமிழ் மற்றும் தெலுங்கு என சின்னத் திரை நடிகையாகவும் ரசிகர்களின் இல்லத்துக்குள் நுழைந்தவர். தற்போது ஆந்திர அரசியலிலும் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்து,. சுறுசுறுப்போடு சுழன்று வருகிறார்.



சமீபத்தில் அவருடைய குழுவில் பணியாற்றிய ஒருவர், கடைசி நேரத்தில் தனது திருமண அழைப்பிதழை நீட்டியிருக்கிறார். குறிப்பிட்ட தினம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தாலும், திருப்பதியிலிருந்து நேராக பட்டாபிராம் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு, பெங்களூர் சென்றிருக்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: