தெலுங்கானா:
போகாம இருக்க பணம் கொடுக்கணும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் போக... அட ஆமாங்க... எல்லாம் தலைகீழ்தான்.


என்ன விஷயம் தெரியுங்களா? ஜெயிலுக்கு போக ஆசைப்படுறீங்களா? நீங்க குற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை.... ரூ.500 கொடுத்தால் போதும் நீங்க ஜெயிலுக்கு போகலாம் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.


இது என்ன புதுமை... என்கிறீர்களா... விஷயத்தை பாருங்களேன்...  


ஜெயிலுக்கு சென்று அதை பார்க்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருக்கா... இதற்காகவே தெலுங்கானா அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


 மேடக் மாவட்டத்தில் உள்ள சங்க ரெட்டி என்ற இடத்தில் உள்ள மிக பழமையான சிறை வளாகம் உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் போராடியவர்கள் அடைக்கப்பட்ட சிறை இது என்பது குறிப்பிடத்தக்கது.


 இந்த ஜெயிலில் ஒருநாள் முழுக்க இருந்து ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க ஒரு சிறப்பு ஏற்பாடு செய்திருக்கு தெலுங்கானா அரசு. ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும் ஒருநாள் முழுவதும் ஜெயிலில் இருக்கலாம்.


 இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஜெயிலுக்குள் சென்றவுடன் கைதிகளை போலவே சிறையில் அடைத்து விடுவாங்க... கைதிகளுக்கு கொடுப்படுவது போலவே 3 வேலை உணவும் உண்டு.


 கைதிகள் அணியும் உடைதான் உங்களுக்கும். விருப்பம் உள்ளவர்கள் கைதிகளுடன் சேர்ந்து ஏதாவது வேலை செய்யலாம். இப்படி ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க இந்தியாவிலே முதல்முறையாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. யாராச்சும் ரெடியா... அட போங்கப்பா... போய் பார்த்துட்டு தான் வாங்களேன்...



మరింత సమాచారం తెలుసుకోండి: