கர்நாடகா:
குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது உங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் தர முடியுமா என்று கர்நாடக முதல்வர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திட்டவட்டமாக தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் காவிரிநீர் கேட்டு நாம் மல்லுக்கட்டுவதும்... அவர்கள் இல்லை என்று கையை விரிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அங்கு மழை அதிகளவில் பெய்தால் மட்டுமே தங்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக முதல்வரே இப்படி சொன்னார்... எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்ல... நீங்க விவசாயத்திற்கு தண்ணீர் கேட்கிறீர்களே என்று... இப்போது கர்நாடக கூட்டத்தில் தண்ணீர் தர முடியாது என்று முடிவு செய்திருக்காங்கலாம்... என்ன கொடுமைங்க இது!


మరింత సమాచారం తెలుసుకోండి: