பெங்களூரு:
கர்நாடகத்தில் நடந்து வரும் கலவர சம்பவங்கள் மக்கள் மனதில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள இருமாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கர்நாடகத்தில் நடந்து வரும் கலவரம், வன்முறை சம்பவங்களை அடுத்து பெங்களூரு, மைசூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் வெளியிட்ட செய்தி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா?


காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதிகாக்க வேண்டும். காவிரி பிரச்னையில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: