பெங்களுரு :
கன்னடர்களின் கொலை வெறி தாக்குதலால் தமிழர்கள் கர்நாடகாவிலிருந்து வெளியேற தொடங்கிவிட்டனர். இதனால் பாதிப்பு என்னவே கன்னடர்களுக்குதான்.


என்ன விஷயம் என்றால்... பெங்களூர் நகரில் நடந்த கலவரத்தில், ஏராளமான தமிழர்கள் மனம் வெறுத்து போய் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். சுமார் 10 லட்சத்துக்கு மேலான தமிழர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.


 இதனால் கட்டுமான தொழில்கள் செமத்தியாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த தமிழர்களும் இல்லாததால், பெங்களூர் முழுவதும் 100-க்கும் அதிகமான பிணங்களை எரிக்க முடியாத நிலை நீடிக்கிறதாம்.


 கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் இல்லாததால் அதிகளவில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் இல்லாட்டி பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரட்டும்... உணரட்டும்...



మరింత సమాచారం తెలుసుకోండి: