பாக்தாத்:
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் பிரபல கடைவீதியில்  தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெறியாட்டத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 


ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.


இதில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 28 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாத வெறியாட்டம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: