காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளுத்து வாங்கினார்.ரபேல் ஜெட் வாங்கும் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதலை தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது.

Image result for rahul gandhi

இதன் போது ராகுல் பிரதமர் மோடியை நோக்கி எதற்காக ஜெட் வாங்கும் பட்ஜெட் 526  கோடிகளில் இருந்து 16100  கோடி ஆனது என்றும் எதற்காக 126 ஜெட் வாங்க வேண்டிய இடத்தில வெறும் 36  மட்டுமே வாங்கப்பட்டது என்றும், இந்த முடிவுகளை பிரதமர் பாதுகாப்பு அமைச்சகத்தோடு கலந்தாலோசித்து முடிவெடுத்தாரா இல்லை தன்னிச்சையாக செயல்பட்டாரா என்று சரமாரியாக கேள்வி கேட்டார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதிலே இல்லை, பதிலளிக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பின்னால் மறைந்து கொள்கிறார், இதிலேயே ரபேல் ஜெட் விவகாரத்தில் முறைகேடு உள்ளது தெளிவாகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: