சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது கமல் ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அதுதான் நாதுராம் கோட்ஸே, காந்தியை கொன்றவர் என்று கருத்து கூறியது பலத்த சர்ச்சைக்குள்ளானது. இதற்கு சில நாட்களுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தநேரத்தில் அவரின் மீது  பாஜக தொண்டர் ஒருவர் செருப்பை எடுத்து வீசினார்.

Image result for h raja apherald

இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அந்த நபரை மக்கள் நீதி மய்யம் கட்சி  தொண்டர்கள் அடித்து துவைத்து அதன்  பின்னர் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.இத்தனை களேபரங்கள் நடந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர்,  கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசிய அந்த  நபரை சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த புகைப்படங்களை  பாஜகவினர் தங்களுடைய டுவிட்டர்  மற்றும் பிற சமூக வலைதள பக்கங்களில் பெருமையுடன்  பகிர்ந்து வருகின்றனர். மாற்றுக்கருத்து இருக்கும் பட்சத்தில் நாகரீகமாக எதிர்ப்பை காட்டாமல் செருப்பை வீசியதே தவறு, அதனை கண்டிக்காமல் பாராட்டுவது கேவலம் என்று மக்களும் அரசியல் சார்ந்தோரும் ராஜாவை கிழித்து வருகின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: