மகள் திருமணத்தில்  பாடிய தந்தை  மரணம் அடைந்த நிலையில் இறந்ததை  தெரிவிக்காமல் மறைத்து, திருமணத்தை முடித்து வைத்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரசாத்  மகள் அர்ச்சா திருமண வரவேற்பு  சனிக்கிழமை நடந்தது. 

Image result for vishnuprasad died in marriage

நிகழ்ச்சியில்  பாட்டு கச்சேரியில் மணமகளின் தந்தை விஷ்ணுபிரசாத் உற்சாகமாக  பாடிக்கொண்டிருந்த  நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால்  ஞாயிறு அவர் மரணம் அடைந்துவிட்டார்.விஷ்ணுபிரசாத் மரணம் அடைந்ததை  உறவினர்கள் அவரது மகளிடம் சொல்லாமல் மறைத்து  திருமணத்தின் போது அர்ச்சா  தந்தை எங்கே என்று கேட்டபோது  ஏதோ சொல்லி சமாளித்து  திருமணத்தை நடத்தி முடித்தனர்.


திருமணம் முடிந்து சடங்குகள் அனைத்தும் முடிந்த பின் விஷ்ணுபிரசாத் இறந்தது குறித்து  மகளிடம்  கூறியுள்ளனர். விஷ்ணுபிரசாத் இறந்த செய்தி கேட்டு கதறி அழுத அர்ச்சாவை தேற்ற  தெரியாமல் உறவினர்கள் திணறி  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: