நான்கு குழந்தைகளுக்கு தாயான  பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார்.அந்த பெண் அந்த காதலை மறுத்ததால் குழந்தையை இளைஞர் கடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது.டெல்லியை சேர்ந்த காம்லேஷ்க்கு 4 குழந்தைகள் உள்ளனர்.


குழந்தைகளுடன் காம்லேஷ்  வாழ்ந்து வந்த நிலையில் வீட்டிற்கு  வேலையாக வந்த இளைஞர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி, காம்லேஷ் அவரை  விரட்டிவிட்டார். இந்நிலையில் காம்லேஷின் 9 வயது பெண் குழந்தை  காணாமல் போனார்.


காம்லேஷ்  போலீசிடம் புகார் செய்த நிலையில் சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர், அதில்  இளைஞர் காணாமல் போன சிறுமியை அழைத்து  சென்றது தெரிந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை தெரியுமா என போலீசார் கேட்டபோது அந்த இளைஞர் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், காம்லேஷ் மறுத்துவிட்டதாகவும் கூறினார். அந்த இளைஞரின் விபரங்களை சேகரித்த போலீசார் அவரை கைது செய்து, கடத்தப்பட்ட சிறுமியை  மீட்டனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: