வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு  இடம் மறுத்துள்ளார் கேப்டன் கோலி.இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. 


ரோஹித் சர்மா, அஸ்வின், குல்தீப் என எதிர்பார்த்த வீரர்களுக்கு இடம் மறுத்த கேப்டன் கோலி கண்டு  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அணியை அறிவித்த கோலி அஸ்வின், குல்தீப் இல்லை, ஸ்பின்னராக ஜடேஜா தான்  ஆடுகிறார் என்றது பெரிய  திருப்பமாக இருந்தது.முதல் டெஸ்டில் ஆடும்  அணி: மாயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, ஹனுமா விஹாரி.


ரிஷப் பண்ட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 207 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. ஜடேஜா மட்டுமே களத்தில் இருந்த ரன் குவிக்கும் பேட்ஸ்மேன். மற்ற மூவரும் பந்துவீச்சாளர்கள். அவர்களை வைத்துக் கொண்டே ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஜடேஜா. 58 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார். ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு அளித்த இரண்டு வீரர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா. இஷாந்த் சர்மா 60 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார். 62 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், ஜடேஜா மறுபுறம் ரன் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். பும்ரா 10வது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தார். அவர் எடுத்த ரன்கள் வெறும் 4 மட்டுமே.


మరింత సమాచారం తెలుసుకోండి: