ஸ்பெயின்:
ஒரு பக்கம் போட்டி நடக்க, மறுபக்கம் மகளை தொலைத்த தாய் பரிதவிக்க ஆட்டத்தை நிறுத்தி அந்த பெண்ணுக்கு உதவினார் நடால். இப்போது இவர் மீதான மதிப்பு உயரே... உயரே சென்றுள்ளது.


விஷயம் என்னன்னா? ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால். களிமண் தரையின் மன்னன். இவர் பங்கேற்ற டென்னிஸ் போட்டி நடந்தது. 


இந்த ஆட்டத்தை 7 ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்களின் கூட்டத்திற்குள் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. பெண் ஒருவர் தன் குழந்தையை தொலைத்து விட்டு பதறி தேடிக்கொண்டிருந்தார். அழுதபடியே குழந்தையை அங்கும்இங்குமாக தேடிக் கொண்டிருந்தார்.


இதை தற்செயலாக நடால் கவனித்து விட்டார். உடனே தனது ஆட்டத்தை நிறுத்தினார். தொடர்ந்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் அந்த பெண் மீது பட்டது. தொடர்ந்து அந்த பெண் தன் குழந்தையையும் கண்டுபிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார். மேலும் நன்றி உணர்ச்சியுடன் நடாலை நோக்கி கைகாட்டினார். தற்போது இந்த சம்பவம் தான் ரசிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: