சென்னை:
20 லட்சம்... 20 லட்சம்ங்க... என்று கணக்கு சொல்லியிருக்காங்க இவங்க. என்ன கணக்கு தெரியுங்களா?


சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் கார்களை ஹீண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை பநீபெரும்புதூர் அருகே 1996-ம் ஆண்டு ஹீண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சென்னைத் துறைமுகத்தைதான் பயன்படுத்தி வருகிறது. 


2000-ம் ஆண்டு முதல் சென்னை துறைமுகம் வாயிலாக கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் கடந்த 2006ம் ஆண்டு வரை 3 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டில் அதாவது 2006-16 வரை ஹீண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் கார்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்ற தகவலை துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதை கொண்டாடும் விதமாக விழா எடுடுத்து கொண்டாடி உள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: