தமிழ் சினிமாவின் முன்னணி படலாசிரியரான நா.முத்துக்குமார் அண்மையில் மரணம் அடைந்ததையே, நாம் இன்னும் மறக்காத நிலையில், தற்போது மற்றொரு இளம் பாடலாசிரியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 


பாடலாசிரியர் அண்ணாமலை நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவரது வயது 49. இவர் தமிழசினிமாவில் இதுவரை 100-க்கும் மேற்ப்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய வரிகளால் உருவான பாடல்கள் தான் 'என் உச்சி மண்டையில்' , 'ஒரு சின்ன தாமரை', 'ரத்தத்தின் ரத்தமே' உள்ளிட்டவை  ஆகும்.


மேலும் இவரது பிரிவால் வாடும் இவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ் ஹெரால்ட் சார்பில் நெஞ்சார்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: