நடிகை த்ரிஷா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முறையாக ஹாரர் வகை படங்களில் நடித்து பார்த்தார். கிளாமரான பேயாக த்ரிஷா நடித்த படமான சுந்தர். சியின் அரண்மனை 2 வசூல் ரீதியாக சுமாராக போனாலும் த்ரிஷா இந்த படத்தில் தன் டூ பீஸ் பிகினி உடை கவர்ச்சியால் ரசிகர்களை சூடேற்றியிருந்தார்.



படு கவர்ச்சியாக நடித்த இந்த படத்தை தொடர்ந்து கோடி படத்தில் அரசியல்வாதி வில்லியாக நடித்த த்ரிஷா மீண்டும் நாயகி என்ற ஹாரர் படத்தில் நடித்தார். இந்த படம் வந்த இடமும் தெரியாமல் போன தடமும் தெரியாமல் படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் மீண்டும் த்ரிஷா மோகினி படத்தில் பேயாக அவதாரம் எடுத்துள்ளார்.



அடுத்த வாரம் வெளியாக உள்ள மோகினி படத்தை அரசாங்கம் படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த மோகினி விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்காவை எதிர்த்து மோதுகிறது. பேய் பழிவாங்கும் படமான மோகினி ஆவது த்ரிஷாவின் முதல் பேய்பட வெற்றியாக அமையுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: