லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடைசியாக தெலுங்கில் ஜெய் சிம்ம படத்தில் பாலக்ரிஷ்ணா ஜோடியாக நடித்திருந்தார். அதற்கு முன்னதாக தமிழில் கடைசியாக சென்ற ஆண்டு அறம் மற்றும் வேலைக்காரன் படங்களில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார். இப்பொழுது தனது அடுத்த இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் மிக மிக குறுகிய  கால இடைவெளியில் வர உள்ள நிலையில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் நேற்று முதல் கலந்து கொண்டுள்ளார்.



தனது வேலைக்காரன் பட ஹீரோவான சிவ கார்த்திகேயன் ஜோடியாக தான் அடுத்ததாக நயன் நடிக்க உள்ளார். இன் படத்தை இயக்க உள்ள இயக்குனர் எம்.ராஜேஷ் ஏற்கனவே நயன்தாராவை பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி படத்தில் இயக்கி உள்ளார்.



ராஜேஷின் கடைசி மூன்று படங்களான ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய மூன்று படங்களுமே தோல்வி அடைந்த நிலையில் இந்த படமாவது நாயனால் ஜெயிக்குமா என்று பார்க்கலாம். இந்நிலையில் நயன் நடிப்பில் ஆகஸ்டு பதினேழாம் தேதி கோலமாவு கோகிலா படமும் ஆகஸ்ட்டு முப்பத்தி ஒன்றாம் தேதி இமைக்கா நொடிகள் படமும் வெளியாக உள்ளன. 


మరింత సమాచారం తెలుసుకోండి: