நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை பிரிந்த பின்னர் நடித்து வரும் அணைத்து படங்களுமே சிறப்பு கவனத்தை பெற்று தான் வருகின்றன. அமலா பாலின் கவர்ச்சி அல்லது படத்தின் புதுமையான கதை என்று எதோ ஒரு காரணத்துக்காக கவனத்தை பெற்ற வண்ணமே வெளியாகி வரும் அமலா பாலின் அடுத்த படங்கள் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன.



கடைசியாக இவர் நடித்த படங்களில் திருட்டு பயலே டூ வெற்றி பெற்றாலும் கடைசி படமான பாஸ்கர் ஒரு ராஸ்கல் வந்த சுவடே இன்றி படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இவர் அடுத்ததாக அதோ அந்த பறவை போல என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கி வரும் இந்த படத்தில் அமலா பால் தான் பிரதான கதாபாத்திரம். கதாநாயகர் யாரும் கிடையாது.



காடும் காடு சார்ந்த பகுதிகளிலும் அதோ அந்த பறவை போல பட குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் படமாக்க பட்ட ஒரு காட்சியின் போது அமலா பாலிற்கு அடி பட்டதில் எதிர்பாராத விதமாக அவரது தசை நார் கிழிந்து கைகளை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது.



தனது கை வலியை கூட பொருட்படுத்தாமல் அந்த காட்சியை முழுதாக நடித்து கொடுத்த அமலா பாலின் தொழில் பக்தியையும் கடின உழைப்பையும் பட குழுவினர் பாராட்டி உள்ளனர். அடிபட்டதால் அமலா பால் ஒரு வாரம் ஓய்வுக்கு பின்னர் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. அமலா பால் தமிழில் அதோ அந்த பறவை போல படத்திலும் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக ஆடுஜீவிதம் படத்திலும் நடித்து வருகிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: