நடிகர் சிம்பு, தனது சென்ற வருட பிளாப் ஆன படமான அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு இந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தின் மூலமாக ஒரு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த மல்டிஸ்டாரர் படத்தில் எத்தி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்த சிம்புவுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தன.



மேலும் இப்பொழுதெல்லாம் ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வந்து முறையாக நடந்து கொள்வதாகவும் பாராட்டுகள் பெற்று வருகிறார் சிம்பு. அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் நடித்து முடிக்க உள்ளார். தெலுங்கு படமான அதாரின்டிக்கி தாரெதி படத்தின் ரீமெக்க்கான இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இந்த படம் ஜனவரியில் வெளியாக உள்ளது.



இதனை அடுத்ததாக சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஒன்பதாவது படமான மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். பக்கா அரசியல் படமாக உருவாக உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று ஷூட்டிங் தொடங்க உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: