பெங்களூரு:
பற்றி எரிகிறது கர்நாடகா... தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவால். இந்நிலையில்  கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட பெரும் பதற்றம் உருவானது.



உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் 15,000 கன அடி நீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.


ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கடும் எதிர்ப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன.


விவசாயிகள் கொந்தளிப்புடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து வல்லுனர்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வரும் நிலையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் உருவானது. இனி என்ன நடக்கும் என்பதுதான் தமிழக மக்களின் கவலையாக உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: