சென்னை: 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார். (அட நீங்க சொல்றது இருக்கட்டும். அந்த கட்சிகள் எப்போ உங்களை கூட்டணிக்கு கூப்பிட்டாங்க..) 


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன்அ றிவித்தார்.


இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் குதித்துள்ளன. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: 


உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மேலவை, சட்டப்பேரவை தீர்மானங்கள் இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: