சிரியா:
சிரியாவில் நடக்கும் இந்த தண்டனை சரியா... சரியா... என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. என்ன விஷயம் என்றால்...


சிரியாவின் மேற்கு பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இவர்கள் நடத்தும் அட்டூழியம், கொடூரம் ஆகியவற்றை சொல்ல வார்த்தைகளே இல்லை என்றுதான் கூறவேண்டும். 


இப்பகுதிகளில் வாழும் சிரியா மக்களை தீவிரவாதிகள் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இங்குள்ள ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து திருடிய குற்றத்திற்காக பொதுமக்கள் முன்னிலையில் அவரின் வலது கை மணிக்கட்டை வெட்டி எடுத்துள்ளனர். 


இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வெகு அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. வலியால் துடித்த அவருக்கு உடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கட்டு போட்டுள்ளனர். என்ன கொடூரம்...?


మరింత సమాచారం తెలుసుకోండి: