வடவைத்தியநாதர் கோவில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ளது. சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், இத்திருத்தலம், சாஸ்திரம்பாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. 


இத்தலத்தில் சிவபெருமான், தையல் நாயகி அம்பாள் வீற்றிருக்கின்றனர். இங்கு சிவனுக்கு ஆராதனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், நோய் நொடிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான், இத்தல இறைவனை வைத்தியநாதர் என்று அழைக்கின்றனர்.


மன நோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்ட பலர், இத்தலத்திற்கு வந்து வழிபட்ட பின்பு, குணமடைந்து சென்றுள்ளனர். நோய்களை குணப்படுத்துவதில், இத்தலம் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த ஆலயத்தில், தற்போது ஒரு வேளை மட்டுமே,  பூஜை செய்யப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே, இந்த ஆலயம் திறந்திருக்கும். 



మరింత సమాచారం తెలుసుకోండి: